அண்ணா பல்கலைக்கழக அகமதிப்பீடு தேர்வுகள் – மே 18 முதல் தொடக்கம்!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான அகமதிப்பீடு தேர்வுகள் வருகிற மே மாதம் 18 ஆம் தேதி முதல் ஜூலை 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள், தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான அகமதிப்பீடு தேர்வுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி இந்த மாணவர்களுக்கான தேர்வுகள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆன்லைன் மூலமாக வருகிற மே மாதம் 18 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கொரோனா காரணமாக பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 75 ஆயிரம் தடுப்பூசிகள் இறக்குமதி – பணிகள் தீவிரம்!!
அதே போல சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.