பொறியியல் மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு !!!!!
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்வது குறித்து தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அது குறித்து தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வகுப்புகளுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய செமஸ்டர் தேர்வு மதிப்பெனில் இருந்து 30% மற்றும் அக மதிப்பீட்டின் மூலம் 70% தயார் செய்யப்பட்ட வேண்டும். இவை செய்முறை அல்லாத பாடங்களுக்கு ஆகும்.
அக மதிப்பீடு தேர்வு எழுதவில்லை என்றால் அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும். தேர்வு ஆனது திறந்த புத்தக தேர்வாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தப்பட்ட வேண்டும். செய்முறை வகுப்புகளுக்கு முந்தைய செமஸ்டர் தேர்வு அடிப்படையிலேயே 100% மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |