தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு? முக்கிய தகவல்!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் நடப்பு ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வு குறித்து உயர் கல்வித்துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு:
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் சிறப்பு மையங்கள் வாயிலாகவும் கடந்த 27 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 115 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். மேலும் பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காக ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. சுமார் 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று நடைபெற்றது. அதாவது விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1 முதல் வரும் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது. மேலும் விளையாட்டு பிரிவுக்கு விண்ணப்பித்த சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் பின்னர் ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசம் கடந்த மாதம் 19ஆம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 22ஆம் தேதி வெளியானதால் பொறியியல் படிப்புகளில் சேர 27 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனால் கலந்தாய்வு அட்டவணையில் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – போக்குவரத்தில் மாற்றங்கள்
இந்நிலையில் இதுவரை திருத்தம் செய்யப்பட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியாகாமல் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மேலும் தற்போது கலந்தாய்வு குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வு நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 16 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட உயர்கல்வி திட்டமிட்டுள்ளது. அதாவது நீட் முடிவுக்கு பின் பல மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறலாம் என்பதால் கலந்தாய்வு தள்ளி போகிறது என தகவல்கள் கூறுகின்றன.