பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு
பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக நடத்தப்படும் தேர்விற்கான அறிவிப்பினை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது அறிவித்து உள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் படித்து இன்னும் தேர்ச்சி பெறாமல் இருக்கும் அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக இரண்டு சிறப்பு தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழககம் ஆனது நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி சிறப்பு தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பருவத் தேர்வோடு நடத்தப்பட்டது. மற்றோரு தேர்வானது ஏப்ரல் மே மாதங்களில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலால் ஊரடங்கில் இருந்தது. இதனால் தேர்வானது நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2020 எப்போது..?
இந்நிலையில் சிறப்பு தேர்வு குறித்து பல்கலைக்கழக இயக்குனர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். ஊரடங்கு முடிந்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் திறக்கப்பட்டதும், சிறப்புத்தேர்வானது பருவதைதேர்வோடு நடத்தப்படும்.
ஏற்கனவே சிறப்பு தேர்விற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள், மீண்டும் கட்டணம் செலுத்தவோ பதிவு செய்யவோ தேவை இல்லை. மேலும் இந்த தேர்வு குறித்த அறிய கீழே உள்ள இணைய முகவரியினை அணுகலாம்.
More Details – Click
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |