அண்ணா பல்கலை தேர்வில் 70% பேர் தோல்வி – மாணவர்கள் அதிருப்தி!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகளில் 70% மாணவர்கள் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தோல்வி
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் ஆன்லைன் வழியாக செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 11 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.
TN Job “FB Group” Join Now
இந்த தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது. ஏனென்றால் தேர்வு எழுதிய மாணவர்களில் 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்துள்ளனர். அதாவது மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகளில், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கேமராவால் கண்காணிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!
இதன்படி எழுத்துத் தேர்வுக்கு 80 சதவீதமும், நேர்முகத்தேர்வுக்கு 20 சதவீதமும் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த தேர்வுகளில் காப்பி அடித்தல், கேமராவை பார்த்து எழுதவில்லை என 20க்கும் மேற்பட்ட காரணங்களை கூறி மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியுள்ளது. அதனால் பல்கலைக்கழக தேர்வு முறையை மாற்றி, மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
Very bad..result its too hurting..to students