அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை – 1 சதவீதத்திற்கு கீழ் அரசு பள்ளிகள்!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 1% கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை இருப்பதாக ஆய்வுகள் தகவல் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள்:
தமிழகத்தில் பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் ஆகிய தொழிற் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் மிக குறைந்து காணப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது. நுழைவுத் தேர்வு என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்றுவரை கடினமானதாக இருந்து வருகிறது என்று தெரிவித்தனர்.
ஒரு நொடியில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
மேலும் அரசுப் பள்ளி மாணவர்களால் தொழிற் படிப்புகளில் சேர முடியாமல் போவதற்கு பல காரணிகள் உள்ளது என்பதை கண்டறிந்தனர். மேலும் இக்குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதா அல்லது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கையில் வழங்குவதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. மேலும் கடந்த 2019 -2020 ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலையில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை 1.49 சதவீதமும், 2021 – 22 ம் கல்வியாண்டில் 0.83 சதவீதமும் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் செப்.23ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் – வெளியீடு!
மேலும் அரசு பொறியியல் கல்லூரி, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி , அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரி என அனைத்திலும் 2019- 2020 ஆம் கல்வி ஆண்டில் 5.26 சதவீதமும் 5.17 சதவீதமும் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை உள்ளது. மேற்கண்ட புள்ளி விவரங்களின் படி அண்ணா பல்கலைக்கழகத்தில் 1% கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை இருப்பதாக தெரியவந்துள்ளது.