தமிழகத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் – முதல்வர் ஆணை!

0
தமிழகத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் - முதல்வர் ஆணை!
தமிழகத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் - முதல்வர் ஆணை!
தமிழகத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் – முதல்வர் ஆணை!

தமிழகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தினத்தன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அண்ணா பதக்கங்கள் குறித்து தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

அண்ணா பதக்கங்கள்

தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களில் சிறப்பாக பணி புரிந்தவர்களை கெளரவிக்கும் விதமாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றவர்களை பாராட்டும் விதமாகவும் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பதக்கம் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15ம் தேதி அன்று வழங்கப்படுவது வழக்கமாகும்.

மேலும் நடப்பு ஆண்டுக்கான தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் குறித்து தமிழக முதல்வர் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் நடப்பு ஆண்டில் காவல்துறையில் முதல் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் பிரிவில் 100 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் பணிபுரியும் முன்னணி தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் நிலை வரை உள்ளவர்களில் 8 பணியாளர்கள் இந்த பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் இனி சுங்க சாவடி தேவையில்லை – மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலரில் சிறப்பாக பணியாற்றிய 10 பணியாளர்கள், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் வட்டார தளபதி வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 5 அலுவலர்கள், விரல்ரேகைப்பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் உள்ளிட்ட 2 பணியாளர் என மொத்தமாக 127 பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக “தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!