பிப்.17 முதல் அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அனுமதி!
குஜராத் மாநிலத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் ஓய்ந்து வருவதை முன்னிட்டு நாளை (பிப்.17) முதல் அனைத்து ஆரம்ப வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அனைத்து அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப நிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளை பிப்ரவரி 17 முதல் திறக்க குஜராத் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இப்போது பள்ளிகளை திறக்கும் குஜராத் அரசின் இந்த முடிவானது, முதல்வர் பூபேந்திர படேல் மாநிலத்தின் தற்போதைய கொரோனா நிலைமையை ஆய்வு செய்த பின்னர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!
இது குறித்து கல்வித் துறை அமைச்சர் ஜிது வகானி கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அங்கன்வாடிகள் மற்றும் முன்பள்ளிகளை பிப்ரவரி 17 முதல் மீண்டும் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படுவது இதுவே முதல் முறை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக குஜராத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் தீவிரமடைந்து வந்தததை அடுத்து மூடப்பட்ட பள்ளிகள் கடந்த வாரத்துடன் 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளுக்கு மீண்டுமாக திறக்கப்பட்டது.
PF கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – இந்த ஆண்டு கூடுதல் வட்டி!
என்றாலும் நர்சரி மற்றும் பிரைமரி வகுப்புகளை சேர்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளை துவங்கும் அறிவிப்பு சற்று தாமதமாக வெளியாகியுள்ளது. இப்போது பள்ளிக்கு வரும் அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் முகக்கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் படிவத்தை பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.