தமிழக வங்கிகளில் 3 நாட்கள் விடுமுறை – கொரோனா தொற்று எதிரொலி !

0
தமிழக வங்கிகளில் 3 நாட்கள் விடுமுறை - கொரோனா தொற்று எதிரொலி !
தமிழக வங்கிகளில் 3 நாட்கள் விடுமுறை - கொரோனா தொற்று எதிரொலி !
தமிழக வங்கிகளில் 3 நாட்கள் விடுமுறை  – கொரோனா தொற்று எதிரொலி !

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் செயல்படும் ஆந்திரா வங்கியில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளில் விடுமுறை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 4000 வரை கொரோனா புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மதுரையிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மதுரையில் நேற்று மட்டுமே 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 648 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

6 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் அதிகம் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் இதுவரை 20 இடங்களில் நோய்தடுப்பு பகுதிகள் கண்காணிப்பின் கீழ் உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தெருக்கள் மூடப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 8 முதல் இரவுநேர ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு

இந்நிலையில் மதுரையில் செயல்பட்டு வரும் ஆந்திரா வங்கியின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த வங்கிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் மேலாளர் கூறும் போது, ‘வங்கி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!