1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூலை 4 வரை விடுமுறை அறிவிப்பு!
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்காக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் ஜூலை 4ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்திலும் கோடை விடுமுறைக்காக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் ஜூலை 4ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு இப்போது ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆந்திரா மாநிலத்திற்கு வருகை தர இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க இருக்கிறார். இதனால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து ஜூலை 4ம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள், ஜூலை 5 ஆம் தேதிக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் தகவல்!
வழக்கமாக இம்மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடிவடைந்தவுடன் ஜூன் மாதம் கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2021-22 கல்வியாண்டுக்கான தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் கோடை விடுமுறைகள் தாமதமாக அறிவிக்கப்பட்டது. அதே போல 2022-23ம் கல்வியாண்டும் இப்போது தாமதமாக தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் மோடியின் வருகையை முன்னிட்டு குண்டூர் மாவட்டம் தவிர ஜெகன் சர்க்கார் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் ஜூலை 5 முதல் நேரடி வகுப்புகளை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.