14 நாட்களுக்கு பகுதிநேர ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் 14 நாட்கள் பகுதிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இதை அவர் அறிவித்தார்.
முழு ஊரடங்கு :
கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்வதறியாது திணறி வருகின்றன. புதிய கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. கொரோனா தடுப்பு பணியாக ஊரடங்குகளை அமல்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றன. மேலும் தினசரி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு மையங்களை ஏற்படுத்தி சிகிக்சை அளித்து வருகின்றனர். தனி நபர் இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்க அரசு வலியுறுத்துகிறது. இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,920 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுளள்னர். மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச விமானங்களுக்கு மே 31 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!
இதனால் ஆந்திர மாநில அரசு தற்போது 14 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 14 நாட்கள் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கின் போது கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி நேரம் மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் மதியம் 12 மணிக்கு பிறகு அவரச சேவைகள் மட்டும் தொடந்து இயங்க அனுமதி அளித்துள்ளார்.
elaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்