மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் போராட்டம்! தலைநகர் முற்றுகை!
ஆந்திராவில் சம்பள உயர்வு வழங்காமல் புதிய பிஆர்சியை அரசு அறிவித்ததால் விஜயவாடாவை நேற்று ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அரசு ஊழியர்கள் போராட்டம்:
ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதாக நள்ளிரவில் அரசாணையை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். அதில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை. அதற்கு பதிலாக பிட்மெண்ட் 23 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விஜயவாடாவை நேற்று ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரும் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் வழங்கினர்.
முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலின் போது வெளியிட்ட அறிக்கையில் மாநிலம் முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி அளித்தார். இதனால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அனைவரும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்தனர். இந்நிலையில், முதல்-மந்திரி ஜெகன்மோகன் அதனை நிறைவேற்றவில்லை. ஆதலால் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக ஆந்திரப் பிரதேச அரசு ஊழியர்கள் நேற்று ‘சலோ விஜயவாடா’ என்ற மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
பிப்.7 முதல் கல்லூரிகள், பிப். 14 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
இதற்கு முன் புதிய பிஆர்சி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஊதிய விகிதத்தையே தொடர வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் புதிய பிஆர்சியை அறிவித்தாலும் மற்றும் சம்பள பணத்தை உயர்த்த வில்லை என்பதாலும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதில் லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பேரணியில் பங்கேற்றதால் பரபரப்பு நிலவியது. அந்த பேரணியில் முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், ஆந்திர அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.