விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் கூடுவதற்கு தடை – மாநில அரசு முடிவு!
வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், இந்த விழாவின் போது மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு ஆந்திர பிரதேச மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை தீவிரம் குறைந்து வந்துகொண்டிருக்கிறது. அதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதே போல தமிழகத்திலும் தற்போது பல சேவைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை, கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் இந்த ஆண்டு நடத்துவதற்கு பல மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகிறது.
நடிகை மீரா மிதுன் மேலும் இரு வழக்குகளில் கைது – மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!
ஏனென்றால் சமீபத்தில் கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையை தொடர்ந்து அம்மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் பெருகி வருகிறது. இதை கவனத்தில் கொண்ட ஆந்திர மாநில அரசு, தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள், ஊர்வலம் என்ற பெயரில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நிலைமையை ஆய்வு செய்த முதல்வர், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான விநாயகர் திருவிழாவை நடத்துவதற்கான மற்ற சாத்தியக்கூறுகளை ஆராயவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை விடுத்துள்ளார். இதற்கிடையில் ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள இரவு ஊரடங்கு உத்தரவை இன்னும் சில வாரங்களுக்கு தொடர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனுடன் திருமணங்கள் மற்றும் பிற சமூக நிகழ்வுகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்திய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ,பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்த வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து காலியிடங்களை நிரப்பவும், ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகையை கண்டிப்பாக செயல்படுத்தவும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் மக்களுக்கு அனைத்து மருத்துவ சேவைகளும் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.