ஜூலை 8 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி – 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதன் படி நாளை (ஜூலை 8) முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் தினசரி 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில வாரியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மறுபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில அரசு ஜூலை 8 முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதில் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
WhatsApp ல் ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
கொரோனா பாதிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டத்தின் போது, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஜூலை 8 முதல் சினிமா தியேட்டர்கள், ரெஸ்டாரன்ட்கள், ஜிம்களை திறக்க அனுமதி அளித்துள்ளார். அங்கு முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி 50% இருக்கைகளுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அனைத்து கடைகளையும். வணிக நிறுவனங்களையும் இரவு 9 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் தடைகள் – கேரள அரசு உத்தரவு!
கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் ஜூலை முதலே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி உள்ளது. சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இருப்பினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.