தாஜ்மஹால் உட்பட புராதான நினைவுச் சின்னங்கள் மே 15 வரை அடைப்பு – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தாஜ்மஹால் உட்பட புராதான நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் வரும் மே மாதம் 15 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புராதான சின்னங்கள் அடைப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நோய்த்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மக்கள் கூடும் இடங்களாகிய சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் ஆகியவை மூடப்பட்டது. கோவில்கள் உட்பட மத வழிபாட்டு தலங்கள் ஆகியவைகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டை போல இந்த வருடமும் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்க முடியாத சூழல் காரணமாக, மத்திய அரசின் அறிவிப்பின்படி கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாட்டுகள் அமலில் உள்ளது. அதன்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களாகிய கடற்கரைகள், பூங்காக்களில் 50% மக்கள் மட்டுமே கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு – தலைமை செயலர் இன்று ஆலோசனை!!
அதே நேரத்தில் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தாஜ்மஹால் உட்பட புராதான நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மே 15 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் தெரிவித்த போது, ‘நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து புராதான சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் வரும் மே 15ம் தேதி வரை மூடப்படும்’ என தெரிவித்துள்ளார்.