‘அன்புடன் குஷி’ ஹீரோயினின் இன்ஸ்டா பதிவு – நெகிழ்ச்சியான தருணம்!
அன்புடன் குஷி சீரியலில் மூன்றாவதாக வந்த ஹீரோயின் ஷ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் சீரியலில் நடித்தது குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அன்புடன் குஷி:
ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்களிடம் தனி பெயர் பெற்ற கவனிக்க தக்க வகையில் மட்டுமே இருக்கும். குறைந்த நாட்கள் ஒளிபரப்பானாலும் அந்த கதையில் ரசிகர்களை கட்டிப்போட்டு விடும் அளவுக்கு கதைப்போக்கை தேர்வு செய்வது விஜய் டிவியின் ஸ்பெசாலிட்டி. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜய் டிவியின் ரசிகர் பட்டாளத்திற்குள் வந்து விடுவார். அந்த வகையில் கடந்த ஆண்டு முதல் மதிய நேரத்தில் விஜய் டிவியின் சின்னத்தம்பி நாயகன் பிரஜன் நடிப்பில் ‘அன்புடன் குஷி’ என்ற தொடர் ஒளிபரப்பாகியது.
இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம் – சண்டிகர் அரசு அறிவிப்பு!
இந்த தொடரில் ராஜஸ்தானை சேர்ந்த குடும்பத்தினரின் வீட்டில் வேலை செய்து வரும் ஹீரோ அன்பு முதலாளியின் மகளை திருமணம் செய்வதினால் ஏற்படும் பிரச்னைகளை கொண்ட கதைக்களத்தில் அமைந்தது. முதலில் குஷி கேரக்டரில் நடிகை மான்சி ஜோஷி நடித்தார், பின்னர், ரேஷ்மா வெங்கடேஷ் குஷி கேரக்டரில் நடித்தார், கடைசியாக குஷி கேரக்டரில் நடிகை ஷ்ரேயா அஞ்சன் நடித்திருந்தார். இந்நிலையில் 341 எபிசோடுடன் கடந்த வாரம் அன்புடன் குஷி சீரியல் முடிந்தது.
TN Job “FB Group” Join Now
இதனை அடுத்து, இந்த சீரியலில் குஷி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷ்ரேயா அஞ்சன், சீரியல் முடிந்தது குறித்து உணர்ச்சிப்பூர்வமாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புடன் குஷியின் மிக அழகான பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு ஒரு அற்புதமான பயணமாக இருந்தது. குஷியாக நான் நடித்ததற்கு அன்பும், ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணைத்துள்ளார். இது தனது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.