மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தொகை உயர்வு? அரசு தரப்பு விளக்கம்!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் பென்ஷன் தொகை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியத்தொகை:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. பணவீக்கம் உயர்ந்தாலும், ஊழியர்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்படாமல் இருக்க இந்த அகவிலைப்படி தொகை அவர்களுக்கு பயன் பெற்று வருகிறது. இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தப்பட்டது.
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிக்கை!
அதன் பிறகு கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு கட்டமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 1ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் 3% அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டு தற்போது மொத்தம் 34% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓய்வூதிய தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் வகுப்புகள்!
ஓய்வூதியதாரர்கள் 80 வயதை தொடும் போது பென்சன் தொகை 20% உயர்த்தப்படுகிறது. 80 வயதில் பென்ஷன் தொகையை உயர்த்துவதற்கு பதிலாக 65 வயது முதல் பென்சன் தொகையை ஆண்டுக்கு 1% உயர்த்தினால் சரியாக இருக்கும் என ஓய்வூதிய நல சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுகுறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவும் இதே பரிந்துரை வழங்கியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றனர்.