தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒரு முக்கிய சுற்றறிக்கை – கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை செயற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கொரோனா காரணமாக மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!
இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறைசார்ந்த அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பழுதடைந்த பொருட்கள், மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை நீண்டகாலமாக வகுப்பறைக்குள்ளும் மற்றும் வெளிப்புறங்களில் காணப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறைசார்ந்த அலுவலகங்களில் பழுதடைந்த பொருட்கள், மரச்சாமான்கள், இரும்பு பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். மேலும் இந்த உபயோகமற்ற பொருட்களை ஏலம் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். இந்த ஏலத்தொகையை அரசு வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்