தமிழகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி!

0
தமிழகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மாணவர்களின் நலன் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் நலன்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்ய 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்க்க காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதன்படி அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை 8.30 மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதாவது, தற்போது சில தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக நிர்வாகம் பெற்றோரிடம் படிவம் பெற்று வருவதாக புகார்கள் கிடைத்துள்ளன. அத்துடன் இது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனால் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவல்துறையில் ஆர்டர்லி முறை ஒழிப்பு – அதிரடி நடவடிக்கை!

இந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களின் வளாகத்திற்குள் இருக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பெற்றோரிடம் தனியார் பள்ளிகள் படிவம் பெற்றுள்ளது விசாரணையின் போது உண்மை என தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் ஏற்படும் போது பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என்றும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!