இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
இந்தியாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அதிகம். இந்த நிலையில் தற்போது வந்தே பாரத் ரயில் சார்பில் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த முழு தகவலையும் கீழே முழுமையாக பார்ப்போம்.
ரயில் பயணிகள்:
இந்திய நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவி இருந்த காரணத்தால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக உள்ள தொழில்நுட்பங்கள் நிறுத்தப் பட்டது. அதில் முக்கிய ஒன்றாக ரயில்வே துறை உள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் ரயில் பயணம் இல்லாமல் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்தால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து வழி போக்குவரத்துகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. மேலும், இந்த ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்திய ரயில்வே ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்க திட்டமிட்டுள்ளது. அடுத்தாக, 200 ஸ்லீப்பர்கள் கொண்ட வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான டெண்டர்கள் இந்திய ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த டெண்டரில் எக்ஸ்பிரஸின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் பராமரிப்பு போன்றவையும் வரும். அதன்படி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மேம்படுத்துவதற்கான டெண்டரும் ரயில்வே வெளியிட்டுள்ளது. டெண்டரின் கடைசி தேதி 26 ஜூலை 2022 என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!
மேலும் இந்திய ரயில்வே கூறிய தகவலின் படி, ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டெலிவரிக்கான காலக்கெடு 6 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் என்று டெண்டரில் கூறப்பட்டுள்ளது. இந்த காலத்திற்குள் 200 ரயில்கள் தயாரிக்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் 1 முதல் தர ஏசி, 4 இரண்டாம் தர ஏசி மற்றும் 11 மூன்றாம் தர ஏசி பெட்டிகள் இருக்கும். 20 பெட்டிகள் கொண்ட ஸ்லீப்பர் ரயிலில் முதல் தர ஏசி, 4 இரண்டாம் தர ஏசி மற்றும் 15 மூன்றாம் ஏசி தர பெட்டிகள் வைக்க பட உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.