சென்னையில் அம்மா உணவகங்கள் நாளை செயல்படும் – மாநகராட்சி உத்தரவு!!
தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாளை அம்மா உணவகம் வழக்கம் போல் செய்லபடும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அம்மா உணவகம்:
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் அம்மா உணவகம் அரசால் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பயனடையும் வகையில் ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் தியேட்டர்கள், மால்கள் மூடல்? புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு!
தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமையில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கின் பொழுது அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல் போன்றவற்றிற்கு பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 25) ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் நாளை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை வழக்கம் போல் நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி அங்கு நாளை அதிக மக்கள் உணவருந்த வருவார்கள் என்பதால் அதிக அளவிலான உணவுகளை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 – வெளியீடு
சென்னையில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் இலவசமாக உணவு வழங்கப்படுமா அல்லது கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை. மேலும் நாளை அம்மா உணவகங்களில் காலை இட்லி, மதியம் கலவை சாதங்கள் மற்றும் இரவு சப்பாத்தி அல்லது சாம்பார் சாதம் போன்றவற்றை தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளனர்.