அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு – அரசு அதிரடி திட்டம்!
அமெரிக்காவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கூடுதலாக இந்திய மாணவர்களை பணியமர்த்த திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர். மேலும், உயர் அதிகாரிகளுக்கு கூடுதலாக சில தள்ளுபடிகளை வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனம்:
விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் மந்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்க நாட்டு வர்த்தகச் சந்தைக்கு ஹெச்1பி விசா மற்றும் கிரீன்கார்டு விசா வழங்குவதில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வருவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை அமெரிக்கா ஹோம்லேண்டு செக்யூரிட்டி துறை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், ஹெச்1பி விசா திட்டத்தில் கூடுதலாக சில கூடுதல் திட்டங்கள் அறிமுகமாகவுள்ளது. மேலும், ஸ்டார்ட்அப் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கூடுதலாக சில தள்ளுபடிகளை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கூடுதலாக சில வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளனர். மேலும், பணியில் சேர இருக்கும் ஊழியர்களுக்கு சில தளர்வுகள் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் எந்தவித மோசடிகளும் இல்லாமல் தகுதியான வெளிநாட்டு ஊழியர்களை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணியமர்த்தவுள்ளனர். இதனையடுத்து கிரீன்கார்டு பெறுபவர்களின் காத்திருப்புக் காலம் குறையவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!
H1B விசா மூலமாக அமெரிக்காவில் வேலை செய்து வரும் வெளிநாட்டவர் கிரீன் கார்டு வைத்திருந்தால் அந்த படிவத்தைச் சமர்ப்பித்து தங்களது ஸ்ட்டேட்டஸ்ஐ மேம்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு ஊழியர்களுக்கு சில மாற்றங்களை கொண்டுவர உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கூடுதலாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த உள்ளதால் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.