தமிழக அரசு ஆசிரியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் திருத்தம்? கோரிக்கை!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ காப்பீடு:
தமிழக அரசு ஊழியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை கடிதம் ஒன்றை முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கடிதத்தில் தெரிவித்தாவது, தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 2008ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் துவங்கப்பட்டு ஒரு ஊழியருக்கு ரூ.20 வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டது.
தமிழக பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை – மாஸ்க் கட்டாயம்!
மேலும் தமிழக அரசு சார்பில் சேவை வரி 12.5% பங்களிப்பு செய்தும் 4 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2012-16 ஆம் ஆட்சி காலத்தில் அதிமுக அரசு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஒரு ஊழியருக்கு ரூ.150 வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு சேவை வரி ரூ.290 பங்களிப்பு செய்தும் ரூ.4 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது.
அதன் பின்பு 2016-20 ஆம் ஆண்டில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அரசாணை எண்.202 யுனைடெட் இந்தியா இன்சூரஸ் நிறுவனம் மூலம் ஒரு ஊழியருக்கு ரூ.180 வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ததுடன் தமிழக அரசின் பங்களிப்பு ஏதும் இன்றி ஆசிரியர்-அரசு ஊழியர்களின் பிரீமிய தொகையில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு மாற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.7.5 லட்சம் எனவும் உச்ச வரம்பு நிர்ணயித்து ஆணையிட்டது.
தற்போது அரசாணை எண்.160 படி புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஊழியருக்கு ரூ.300 வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து, ஆசிரியர்-அரசு ஊழியர்களின் பிரீமிய தொகையில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு மற்றும் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரை உச்ச வரம்பு என்று நிர்ணயித்து ஆணையிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அத்துடன் அரிய வகை நோய் மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகள் தொடர்பாக அதிக செயலிகளை சந்திப்பதற்காக கார்பஸ் நிதியை உருவாக்க ரூ.300 பிரீமிய தொகையில் இருந்து ரூ.5 பிடித்தம் செய்து ஆணையிட்டுள்ளது. ஆகவே தமிழக அரசு தனது ஊழியர்களுக்கான எவ்வித தொகையையும் பங்களிப்பு செய்யவில்லை என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேலும் அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்தது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் திருத்திய புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.