குடும்பத்துடன் லண்டனில் குடியேறும் அம்பானி? சமூக ஊடகங்களில் பரபரப்பு! ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி அவரது குடும்பத்தோடு லண்டனில் குடியேற போவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அதனை மறுத்து தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
முகேஷ் அம்பானி:
ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமானவர் தான் முகேஷ் அம்பானி. இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் தற்போது மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பை அண்டிலியாவில் 4 ஆயிரம் சதுர அடியில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ள 27 மாடி கட்டிடத்தில் வசித்து வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் வரிசையில் இவர் இடம் பெற்றுள்ளார்.சமீபத்தில் பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோன் பார்க் பங்களாவை ரூ.592 கோடிக்கு இவர் வாங்கியுள்ளார்.
நவ.8 முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் – கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு!
அதனால் வரும் 2022 ஏப்ரல் மாதம் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு குடியேறப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. அவ்வாறு வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டன் அல்லது உலகின் வேறு எந்த பகுதிகளுக்கும் இடம் பெயரும் வகையில் எந்த திட்டமும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு – நவம்பர் 30க்கு பின் நீட்டிப்பு கிடையாது!
மேலும் ஸ்டோன் பார்க் பங்களாவை திட்டமிடல் வழிகாட்டுதல் மட்டும் உள்ளூர் விதிமுறைகளுடன் முதன்மையான கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதற்காகவே வாங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லண்டனில் உள்ள 300 ஏக்கர் நிலம் பொழுதுபோக்கு விடுதியை விரிவுபடுத்தும் விதமாக மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கியுள்ளது. இந்த விடுதியானது இந்தியாவின் புகழ்பெற்ற பொழுதுபோக்கு துறையின் தடத்தை உலக அளவில் விரிவுபடுத்தும் என்றும் அறிவித்துள்ளது.