சென்னை மெரினாவில் வரவுள்ள அசத்தல் திட்டம் – மாநகராட்சி முடிவு!
இந்தியாவில் 4-வது பெருநகரமாக விளங்கும் சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் மெரினாவுக்கு வரும் மக்களுக்கு இணையதள வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வைபை வசதி:
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள ஆசியாவின் 2-வது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் மெரினா கடற்கரை பகுதியை மேம்படுத்தும் வகையில் சென்னை மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் மெரினாவானது சிறந்த சுற்றுலா தளமாகவும் உள்ளதால் நாள்தோறும் மெரினாவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் இலவசமாக வைஃபை வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட மேயர், துணை மேயர் ஆகியோருடன் அதிகாரிகள் கலந்தாலோசனை செய்தனர்.
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை வென்ற ஸ்வான்டே பாபோ – அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த கூட்டத்தில் ஒரு முறை Password-ஐ பதிவிட்டு சுமார் 45 நிமிடங்கள் இலவசமாக வைஃபை வசதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது இந்த இலவச வைபை திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறைந்த செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மெரினா மட்டுமல்ல ஒட்டுமொத்த சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்றும் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்