இனி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லையாக களமிறங்கும் நடிகை ஆலியா மானசா – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் முல்லையை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக நடிகை ஆலியா மானசா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல ஒரு குடும்ப சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் பாசத்துடன் ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருக்க திருமணத்திற்கு பின் வரும் பொருளாதார பிரச்சனைகளை தாண்டி ஒற்றுமையாக எப்படி இருப்பது என்பது எல்லாம் இந்த சீரியலின் கதையாக இருக்கிறது. குடும்பக் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் தான் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டு டாப் வரிசையில் இந்த சீரியல் இருக்கிறது.
சோகத்தில் மூழ்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நட்சத்திரங்கள் – விஜே சித்ரா பிறந்தநாளில் உருக்கம்!
சில வாரங்களாக முல்லை கதிரை சுற்றியே சீரியலின் கதை இருக்கிறது. முல்லைக்கு குழந்தை இல்லை என்பதால் அவர் கவலைப்பட டாக்டர் அதற்கு வாய்ப்பு குறைவு என சொல்கிறார். அதனால் மனம் உடைந்த முல்லை வருத்தமாக இருக்க செயற்கை கருத்தரிப்பு மூலமாக குழந்தை பிறக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும் என்பதால் மூர்த்தி பல இடங்களில் கடன் வாங்கி டிரீட்மென்ட் செய்ய சொல்கிறார். அதனால் முல்லை சந்தோசமாக இருக்க செலவு அதிகமாக வருவதால் கதிர் அதை நினைத்து குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
முல்லைக்கு குழந்தை பிறக்குமா என பரபரப்பான சூழ்நிலையில் தினசரி எபிசோடுகள் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி தற்போது சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக ராஜா ராணி 2 சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஆலியா மானசா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தற்போது முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் முல்லை கதாபாத்திரத்தில் வேறு நடிகை நடித்தால் சீரியலில் என்ன மாதிரி திருப்பம் வரும் என எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.