குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா ரீஎன்ட்ரி கொடுக்கும் சீரியல் – நாம் யாரும் எதிர்பார்த்திராத ஹீரோ!
ராஜா ராணி தொடரின் மூலம் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஆல்யா மானசா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தை பிறந்ததால் தான் நடிக்கும் சீரியலில் இருந்து விலகினார். தற்போது இவர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். அது பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
ஆல்யா மானசா:
விஜய் டிவியில் படு ஹிட் அடித்த ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து கொண்டிருக்கும் போது ஆல்யா மானசா தனக்கு ஆண் குழந்தை பிறந்ததால் ஒரு பிரேக் எடுத்தார். இந்நிலையில் பல மாதங்கள் கழித்து இவர் மீண்டும் சீரியல்களில் நடிக்கவுள்ளார். மேலும் கடும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
குறிப்பாக ஒரே வாரத்தில் 10 கிலோ எடை குறைந்துள்ளார். இதனால் இவரின் கணவர் சஞ்சீவ் மிக உயர்ந்த மதிப்புள்ள Bag ஒன்றை வாங்கி கொடுத்து இருப்பார். இந்நிலையில் இவர் ரீஎன்ட்ரி கொடுக்கும் சீரியல் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அவர் சன் டிவியில் புதிதாக தொடங்கப்படும் சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
Exams Daily Mobile App Download
மேலும் அதில் ஹீரோவாக புது முக நடிகர் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே அவர் ஒரு சில தெலுங்கு சீரியல்களில் முன்னணி நாயகனாக நடித்தள்ளவராம். இதே போன்று ரோஜா சீரியலில் சிப்பு சூர்யன் புது முக நடிகராக என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி வருகிறார். அதே போன்று ஆல்யா மானசாவின் தொடருக்கும் நடக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.