தனது மகனுக்காக இரவும், பகலும் தூங்காமல் அவதிப்படும் ஆலியா மனசா – வைரலாகும் வீடியோ!
ஆலியாவிற்கு தற்போது தான் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகன் இரவு முழுக்க தூங்காமல் தன்னையும் தூங்கவிடாமல் ஆலியா மானசா அவதியுறும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆலியா மனசா:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து பெற்றோரின் விருப்பத்தின் பேரில் திருமணமும் செய்து கொண்ட ஜோடி தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். திருமணமான சில நாட்களிலேயே ஆலியா கர்ப்பமானார். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்த பிறகு ஆலியா மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இந்த சீரியலை தொடர்ந்து ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஜீ தமிழில் புது சீரியலில் களமிறங்கும் ‘பாக்கியலட்சுமி’ நடிகர் ஆர்யன் – கதாநாயகி யார் தெரியுமா?
ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போது ஆலியா மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் ஆலியா ராஜா ராணி தொடரில் இருந்து விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நடித்து வந்தார். பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி தொடரில் இருந்து விலகினார். பிரசவத்திற்கு செல்ல இருப்பதால் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க ரியா என்ற புதுமுக நடிகை நடிக்க ஒப்பந்தமானார். ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கு வளைகாப்பு நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
திருமணத்தை விட ஆலியாவின் வளைகாப்பு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தையாக இருந்தால் அர்ஷ் எனவும், பெண் குழந்தையாக இருந்தால் லைலா எனவும் பெயர் வைக்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி இரண்டாவது குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். அவ்வப்போது தொடர்ச்சியாக குழந்தையுடன் இருக்கும்படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டபடி இருக்கிறார். தற்போது அர்ஷ் இரவு முழுக்க தூங்காமல் இருப்பதால் என்னாலும் தூங்கவே முடியவில்லை என அவதியுறும்படியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.