ஆலியா மனசாவிற்காக கணவர் சஞ்சீவ் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
ஆலியாவிற்காக சஞ்சீவ் பல விஷயங்களை தியாகம் செய்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருப்பதால் சஞ்ஜீவ்வை ஆலியா புகழ்ந்து பேசும்படியான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
ஆலியா மனசா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமாகி ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்றவர் தான் ஆலியா. தற்போது தான் ஆலியாவிற்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். சஞ்சீவ் பாதி நேரம் முழுக்க ஷூட்டிலேயே செலவிட்டு விடுவதால் வீட்டில் ஆலியா, குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட முடியவில்லை. இதனால் குழந்தையை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
‘கோபி பாக்கியாவின் கணவர் என்ற உண்மையை தெரிந்து கொண்ட ராதிகா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
மேலும் கூடிய விரைவில் சீரியலில் அறிமுகமாகவும் வாய்ப்பிருக்கிறது. தற்போது தான் ஆலியாவின் பிறந்தநாள் முடிந்தது. மகன் பிறந்த பிறகு ஆலியா முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவ்வப்போது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். பிறந்தநாளுக்கு கூட ஆலியாவை சஞ்சீவ் சர்ப்ரைஸ் செய்தார். சஞ்சீவ் ஆலியாவிற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து ரசித்து செய்வதை பார்த்து ஆலியா மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.
Exams Daily Mobile App Download
பின்பு, சஞ்சீவிடம் ஆலியா இரவு வரைக்கும் கூட ஷூட்டில் தான் இருக்கிறீகள். வீட்டிற்கு வந்து குழந்தைகளை கவனித்து கொள்கிறீர்கள். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் கூட குடும்பத்திற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறீர்கள். வீட்டில் உள்ள வேலைகளை கவனிப்பதில் இருந்து ஷூட்டிற்கு என்ன Costume என்பதை தேர்வு செய்வது என அனைத்தையும் நீங்கள் தான் கவனித்து கொள்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை என காதலுடன் ஆலியா கூறும்படியான வீடியோ வெளியாகியுள்ளது.