தமிழகத்தில் + 2 பொதுத்தேர்வு – கல்வியாளர்களின் மாற்று கருத்துக்கள்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மீண்டுமாக நடத்துவதில் பல வகையான குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் பல கல்வியாளர்கள் தேர்வுகளை நடத்துவது குறித்ததான மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்பு விகிதத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு தேர்வுகளை ஒத்திவைத்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவெடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் +2 தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு, பல கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது கருத்துக்களை அளித்து வருகின்றனர். தேர்வுகள் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் (TNDA) கூறுகையில், மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், தேர்வுகளை ரத்து செய்வதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக தனியார் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஊதியம் – அரசுக்கு வலியுறுத்தல்!!
மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தேர்வுகளை நடத்த முடிவு செய்தாலும், இதற்கு நிறைய காலம் தேவைப்படும். ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் செயல்திறன் எவ்வாறு உள்ளது என்பதை பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இது தவிர தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சம்மேளனம் முதலமைச்சருக்கு கோரிக்கை அளித்துள்ளது.
அதில், 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது மாணவர்களின் உயர் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிரமங்களை ஏற்படுத்தும் என்றும், ஏற்ற சூழல் அமையும் போது, பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்கேற்ப அவர்கள் வீடுகளுக்கு அருகில் தேர்வு மையங்களை ஒதுக்கலாம் எனவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். இருந்தாலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற முடிவை அரசு தான் எடுக்க வேண்டும்.