இந்திய ரயில்வே துறையின் குரூப் D தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு – தமிழக தேர்வர்கள் அதிருப்தி!

0
இந்திய ரயில்வே துறையின் குரூப் D தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு - தமிழக தேர்வர்கள் அதிருப்தி!
இந்திய ரயில்வே துறையின் குரூப் D தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு - தமிழக தேர்வர்கள் அதிருப்தி!
இந்திய ரயில்வே துறையின் குரூப் D தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு – தமிழக தேர்வர்கள் அதிருப்தி!

இந்திய ரயில்வே துறையில் குரூப் D தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான 3ம் கட்ட தேர்வு வரும் செப்டம்பர் 8ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்பித்தவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வே குரூப் D:

இந்தியாவில் ரயில்வே ஆட்கள் சேர்ப்பு வாரியமான (RRB) 2022ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் 1,3769 காலியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் முதல் கட்ட தேர்வு கடந்த 17 முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வு சிறப்பாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 2ம் கட்ட RRB குரூப் D தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்வுக்கான தேர்வு கூட அனுமதி சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டு 100% அதிகமாக மழை பொழிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதில் தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வெளிமாநில மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் D தேர்வானது வரும் செப்டம்பர் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆந்திர மாநிலம் கடப்பாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதே போல ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவருக்கு ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது போல பலருக்கும் தேர்வு மையம் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

இவ்வாறு தேர்வு மையங்கள் வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டால் தேர்வர்கள் நேரத்திற்குள் சென்று பதட்டமில்லாமல் தேர்வு எழுதுவது எவ்வாறு சாத்தியம். குரூப் டி தேர்வுக்கான நீண்ட நாட்கள் படித்து வந்த தேர்வர்கள் தேர்வு மைய ஒதுக்கீட்டால் தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ரயில்வே பணியில் சேருவதில் தமிழக மாணவர்களுக்கு தொடர்ந்து இடர்பாடு ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!