நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு – எதிர்பார்ப்பு!
தமிழக மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு குறித்து பல வித கேள்விகள் எழுந்த வண்ணம் தொடர்ந்து இருந்து வருகின்றது. தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற குழப்பமும் அதிகரித்துள்ளது.
நீட் தேர்வு
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்ந்து படிக்க நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தலின் போது வாக்களித்து இருந்தது. ஆட்சி அமைத்து சிறிது நாட்களே ஆன நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆதார் கார்டு முகவரியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
இது ஒரு பக்கம் இருப்பினும் இந்த கல்வி ஆண்டிலேயே தமிழகத்தில் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அதனை உறுதி செய்வது போலவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பேட்டி அளித்திருந்தார். மாணவர்களை பொறுத்தவரை பலரும் நீட் தேர்வு குறித்து குழப்பத்தில் தான் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் பயிற்சி மையங்கள் இல்லாத காரணத்தால் தங்களால் தேர்விற்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இன்னும் சிலர் தேர்வுகள் நடைபெறுமா என்ற குழப்பத்திலும், அப்படி தேர்வுகள் குறித்து தெரியாவிட்டாலும், தமிழகத்தில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த குழப்பங்கள் குறித்து கல்வியாளர்கள் கூறுகையில் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைத்து சிறிது நாட்களே ஆகியுள்ளது, இதனால் நீட் தேர்வுகளை ரத்து செய்வதில் காலதாமதம் ஆகலாம். இதனால் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராவதே சிறந்தது என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
Give special reservation for corona affected students in mbbs this year