தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது புகார் – மத்திய அரசு நடவடிக்கை!!

0
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது புகார் - மத்திய அரசு நடவடிக்கை!!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது புகார் - மத்திய அரசு நடவடிக்கை!!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது புகார் – மத்திய அரசு நடவடிக்கை!!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி விதிமீறல்களை ஏற்படுத்திய விவகாரம் தற்போது மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த புகார் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

புகார் நடவடிக்கை

தமிழகத்தில் கடந்த 9 ஆம் தேதி துவங்கிய சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றும் போது, அரசு கொடுத்த சில குறிப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி தவறவிட்டிருந்தார். இந்த நிகழ்வு சட்டப்பேரவையில் சலசலப்புகளை எழுப்பிய நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி கூட்டம் துவங்குவதற்கு முன் அவையை விட்டு வெளியேறினார். ஆளுநரின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்கி இருந்தது.

பொங்கல் பண்டிகை: கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.. பிப். 4 வேலை நாள் – புதுச்சேரி அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியின் வெளிநடப்பு நிகழ்வை கண்டித்து திமுக குழு நிர்வாகிகள், முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் புகார் கடிதத்தை சீலிட்ட கவரில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கினார்கள். தற்போது இந்த புகார் ஜனாதிபதியின் குறிப்புடன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தற்போது மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் எதிர்பார்த்துள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!