
வாகன ஓட்டுனர்களுக்கு வந்த மிகப் பெரிய அறிவிப்பு.. இனி ஜாலி தான் – டிராஃபிக் சலான்கள் ரத்து நடவடிக்கை!
2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட டிராஃபிக் சலான்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
டிராஃபிக் சலான்கள்:
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அவர் மாநிலத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017ம் ஆண்டு முதல் 2021 வரை தனியார் மற்றும் வணிக வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து போக்குவரத்து சலான்களும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
2023 ஜூன் 2 ஆம் தேதி உத்தரப்பிரதேச அரசாணை எண் 2-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கும் பட்டியலை பெற்றவுடன், சம்பந்தப்பட்ட சலான்களை அரசு போக்குவரத்து போரட்டலில் இருந்து நீக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு ஆயத்த பணிகள் மும்முரம் – கல்வித்துறை அதிரடி!
இதன் பிறகு, சம்மந்தப்பட்ட நபர்களின் மொபைலுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.