அனைத்து கடைகளும் மதியம் 1 மணி வரை மட்டுமே திறப்பு – நகராட்சி கமிஷனர் அறிவிப்பு!!
கூடலூர் நகராட்சியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கடைகளும் பகல் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அந்நகராட்சி அரசு முடிவு செய்துள்ளது.
கடைகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 ஆம் தேதி வரை முடிவடைய உள்ள நிலையில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து ஜூன் 14 வரை அனைத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் (Whats App) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அப்டேட்!
அதில் மளிகை, காய்கறி, பழக்கடைகள், அத்தியாவசிய தேவை கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் தொடங்கப்பட்டு மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று (ஜூன் 7) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடலூர் நகராட்சி பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
அரசின் உத்தரவின் படி மாலை வரை கடைகள் திறந்திருந்தால் மேலும் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் நகராட்சி அரசு அனைத்து கடைகளும் பகல் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவித்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் வெளியிட்டுள்ளார்.