அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 26 வரை விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி முதல் கன்வர் யாத்திரை நடைபெற்று கொண்டிருப்பதால் அம்மாநிலம் முழுக்க உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் ஜூலை 26 ஆம் தேதி வரைக்கும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை:
உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கிட்டத்தட்ட 15 நாட்கள் கன்வர் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அதாவது, இந்த யாத்திரையில் கலந்துகொள்ளும் சிவ பக்தர்கள் அனைவரும் ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தாங்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் இருந்து கங்கை நீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரை நடைபெறவில்லை.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கன்வர் யாத்திரை கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று துவங்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கன்வர் யாத்திரை நடைபெறுவதால் கிட்டத்தட்ட 5 கோடிக்கும் மேலான சிவ பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கன்வர் யாத்திரையின் போது சில அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால் வாள்கள், திரிசூலங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை யாத்திரையில் கலந்துகொள்ளும்போது பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் – குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை!
மேலும், கன்வர் யாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்காக மின்வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் முதலுதவி வசதிகளுக்கு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கன்வர் யாத்திரையின் பொழுது சாலைகள் அனைத்தும் மூடப்படுவதால் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அரசு, அரசு சாரா பள்ளிகள், தனியார் பள்ளிகள், சமஸ்கிருத பள்ளிகள், மதரசாக்கள், அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் ஜூலை 20 முதல் ஜூலை 26 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.