AIIMS: ஏப்ரல் 1, 2023 முதல் ‘டிஜிட்டல்மயமாக்கம்’ – வெளியான சூப்பரான அறிவிப்பு!!
தற்போது அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான வசதிகள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்த வகையில் புது டெல்லியில் இருக்கும் AIIMS மருத்துவமனையிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
AIIMS
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் உள்பட அனைத்து சிகிச்சைகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி மதுரை எய்ம்ஸுக்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
Follow our Instagram for more Latest Updates
இதையடுத்து தற்போது டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் OPD-க்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு இந்நிறுவனத்தின் தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மருத்துவமனையில் இருக்கும் அனைத்து OPDகளிலும் தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA) ‘Scan and Share QR Code’ கொண்டு வரப்படும்.
ஒரே சமயத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 4000 ஊழியர்கள்.. செக் வைத்த உலகின் முன்னணி நிறுவனம்!
Exams Daily Mobile App Download
இதன் மூலமாக அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தாமதமின்றி தங்களுக்கான வரிசை எண்ணை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் இல்லாத நோயாளிகளால் இந்த வசதியை பெற முடியாததால் இவர்களுக்கு ABHA என்ற ID உருவாக்குவதற்கென காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் பிரத்யேக கவுண்டர்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் ஏப்ரல் 2023-ல் அனைத்து விதமான கட்டணங்களும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள வசதிகள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.