தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் இன்று முதல் திறப்பு – அரசு அனுமதி!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் அனைத்தும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நலனுக்காக இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு அனுமதி:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா 2ம் அலை தமிழகத்தில் மார்ச் மாதத்தில் பரவ ஆரம்பித்த நிலையில், தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதி மற்றும் மே மாத தொடக்கத்தில் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
10 நிமிடத்தில் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
முழு ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பொது போக்குவரத்து போன்ற அனைத்திற்கும் அரசு தடை விதித்தது. இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டது. அரசின் தீவிர முயற்சியினால் தற்போது சில வாரங்களாக தொற்றின் பாதிப்பு நிலை படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு குறைந்த பகுதிகளில் அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. இதனால் முக்கிய துறைகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது.
தமிழக கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – அமைச்சர் உறுதி!
இதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் மீண்டும் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் வாசகர் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு ஜூலை 24ம் தேதியான இன்று முதல் பொது நூலகத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களையும் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.