சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து – பிரதமரிடம் கோரிக்கை!!!
சிபிஎஸ்இ வாரியத்தின் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைன் முறையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி பிரதமர் மோடியிடம் அகில இந்திய பெற்றோர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிபிஎஸ்இ கல்வி வாரியம்:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை மே 4ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
இரவு நேர ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை அமல் – மாநில அரசு உத்தரவு!!
பொதுத்தேர்வு:
கொரோனா தொற்று பாதிப்பினால் தற்போது சில மாநில அரசுகள் பொதுத்தேர்வுகளை ரத்து செய்து வருகிறது. ஒரு சில மாநில அரசுகள் பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்கிறது. இதே போல் சிபிஎஸ்இ வாரியத்தின் பொதுத்தேர்வுளையும் ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் முறையில் நடத்துவதற்கும் பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. அகில இந்திய பெற்றோர் சங்கம் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை நேரடி முறையில் நடத்தக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பொதுத்தேர்வுக்கு ஆயத்தம்:
நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அகமதிப்பீடு மூலம் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பியுள்ளனர். ஆனால் திட்டமிட்டபடி சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேர்வு மையங்கள் அமைத்தல், கொரோனா நோய்த்தடுப்பு வழிமுறைகள் தயாரித்தல் போன்ற முன்னேற்பாடு பணிகளையும் தேர்வு வாரியம் செய்து வருகிறது. தனி மனித இடைவெளியை உறுதி செய்யும் பொருட்டு வழக்கத்தை விடவும் 40 முதல் 50% வரையிலான தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்