இன்ஜினியரிங் கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!!
பள்ளிகள் திறப்பு:
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜனவரி 8ம் தேதி முதல் தகுந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வகுப்புகளை ஆரம்பித்தது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க இருப்பதால் அவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. அடுத்ததாக 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
கல்லூரிகள் திறப்பு:
இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள ஐடிஐ., இன்ஜினியரிங் போன்ற அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை நிறுவனங்களும் பிப்ரவரி 10 ஆன இன்று முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கல்லூரிகள் பிப்ரவரி 17 முதல் நேரடி வகுப்புகளை தொடங்க உள்ளது.
TN Job “FB Group” Join Now
கல்லூரிகள் திறப்பு தொடர்பாக திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஐடிஐ., பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற தொழில்முறை நிறுவனங்களும் இன்று முதல் தங்கள் செயல்பாடுகளை தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கல்லூரிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கல்லூரிகளுக்கு வந்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்