ஐலா பாப்பாவை சமாளிக்க முடியாமல் திணறும் ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!
ஆலியாவிற்கு தற்போதுதான் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சீரியலில் இருந்து விலகியுள்ளார். ஐலா பாப்பா செய்யும் சேட்டைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆலியா கதரும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐலா பாப்பா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். ஒரே சீரியலில் நடித்து இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வரைக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். இதற்கு பிறகு ஆலியாவிற்கு ஐலா பாப்பா என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. ராஜா ராணி சீரியலை தொடர்ந்து ஆலியா ராஜா ராணி சீசன்2 தொடரில் நடிக்க அறிமுகமானார்.
Exams Daily Mobile App Download
ராஜாராணி சீசன் 2 தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட பிரசவத்திற்கு செல்லும் 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். பிரசவம் முடிந்ததும் ராஜா ராணி சீரியலில் மீண்டும் ஆலியா இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. சஞ்சீவ சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நடித்து வருவதால் ஐலா பாப்பா மற்றும் அர்ஷ்ஸை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தினால் தற்போதைக்கு சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
விரைவில் முடிவுக்கு வரும் மற்றொரு பிரபல சீரியல் – ரசிகர்கள் ஷாக்!
மீண்டும் ஆலியா எப்போது ராஜா-ராணி சீரியலில் இணைவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. தற்போது தனது முழுநேரத்தையும் ஆலியா தனது குடும்பத்தினருடனும், ஐலா பாப்பாவுடனும், தனது இரண்டாவது மகன் அர்ஷ்சுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஐலா பாப்பா வளர வளர சேட்டைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஐலா பாப்பாவை சமாளிக்க முடியாமல் எப்பொழுது பள்ளிக்கு அனுப்புவோம் என ஆலியா வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஐலா பாப்பா வீட்டில் செய்யும் சேட்டைகளையும், ஐலா பாப்பாவுடன் விளையாடும் படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.