“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லையாக இனி ஆல்யா மனசா – ரசிகர்கள் அதிர்ச்சி!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டர் மீண்டும் மாற்றப்பட உள்ளதாகவும், தற்போது நடித்து வரும் காவியா அறிவுமணிக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை ஒருவர் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
ரசிகர்கள் அதிர்ச்சி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் ஆகும். கூட்டு குடும்பம், அண்ணன் – தம்பிகள் பாசம் என எளிமையான கதை களத்தை கொண்டு இந்த சீரியல் நகர்வதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஃபேவரைட் ஆக உள்ளது. இதில் மூர்த்தியின் தம்பிகளுக்கு தனம் அண்ணியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வழிநடத்தும் பாசமான மனைவியாக பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா.
Exams Daily Mobile App Download
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் முல்லை கேரக்டரில் விஜே சித்ரா நடித்து வந்தார். இவரின் சிறப்பான நடிப்பால் அந்த கேரக்டர் மிகவும் பிரபலமானது. ஆனால் திடீரென சித்ரா தற்கொலை செய்து கொண்டதால், அவர் நடித்த முல்லை கேரக்டரில் காவியா அறிவுமணி மாற்றப்பட்டார். தற்போது முல்லை குழந்தை பெற்று கொள்ள போராடுவதை மையமாக வைத்து சீரியல் தற்போது நகர்ந்து வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக காவியா அறிவுமணி முடிவு செய்துள்ளதாகவும், இதனால் முல்லை கேரக்டர் மீண்டும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா யார் தெரியுமா? வெளியான சுவாரசியமான தகவல்கள்!
விரைவில் புதிய முல்லையின் என்ட்ரி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இனி முல்லை கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்க உள்ளாராம். அண்மையில் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததில் இருந்து ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கவுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, ஏனென்றால் சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.