பிரசவ அறையிலும் துணிச்சலாக குழந்தையை பார்க்க போகும் சந்தோஷத்தில் ஆலியா – வைரலாகும் வீடியோ!
பிரசவ அறைக்கு ஆலியா செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவை சஞ்சீவ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரசவ வலியை நினைத்து கூட பயப்படாமல் துணிச்சலாக குழந்தையை பார்க்கப்போகும் சந்தோஷத்தில் ஆலியா இருந்தார்.
ஆலியாவின் பிரசவ அறை வீடியோ:
தற்போது சமூக வலை பக்கங்கள் முழுவதுமே ஆலியாவிற்கு குழந்தை பிறந்த விஷயம் குறித்து தான் பேசி வருகின்றனர். ஆலியாவிற்கு ஏற்கனவே ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. தற்போது ஆலியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்தார். அதாவது கர்ப்பமாக இருந்த நிலையிலும் கூட ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார். பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆலியா ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகினார். தற்போது ஆலியாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அர்ஷ் எனவும் பெயர் வைத்துள்ளனர்.
சிகிச்சை எடுப்பதற்கு முன்பாகவே கருவுற்ற முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
தற்போது பிரசவ அறைக்கு ஆலியா சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆலியா அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது பயமும் சந்தோஷமும் கலந்த வலியுடன் மருத்துவமனைக்கு ஆலியா செல்கிறார். எவ்வளவு துணிச்சலான பெண்ணாக இருந்தாலும் கூட பிரசவத்திற்கு பெண்கள் நடுங்குவார்கள். ஆனாலும் குழந்தையை இன்னும் சில மணி நேரங்களில் பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தில் ஆலியா இருக்கிறார். ஆலியா மட்டுமல்லாமல் சஞ்சீவ் மற்றும் ஆலியாவின் மாமியார் என அனைவருமே குழந்தையை பார்க்கப்போகும் ஆர்வத்தில் உள்ளனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – முல்லையை பிரியும் கதிர்? ரசிகர்கள் ஷாக்!
ஐலா பாப்பா ஆப்ரேசன் மூலமாக தான் பிறந்தார். ஆப்ரேசன் செய்த பின்பும் கூட சில நாட்களில் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அதே போல தற்போதும் குழந்தை பிறந்து சில நாட்களில் தனது வேலையை கவனிக்க துவங்கிவிட்டார். குழந்தையை பெற்றெடுத்து 4 முதல் 5 மாதங்கள் வரை முழு ரெஸ்டில் இருக்கும் தாய்மார்களுக்கு மத்தியில் ஆலியாவின் மன தைரியம் அனைவரையும் வியக்க வைக்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.