பொதுமக்களுக்கு அலர்ட்.. அக்.11 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிக்கை!
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையங்களில் வருகிற அக். 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மின்தடை பகுதிகள்:
மின்சாரம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதனால் தமிழக அரசின் கீழ் உள்ள துறைகளில் 24 மணி நேரமும் சேவை வழங்கும் துறையாக மின்சார துறை இருக்கிறது. மின்சார துறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற அக். 11 மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அக். 11 ஆம் தேதி விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் எம். சுடலையாடும் பெருமாள் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதனால் அந்த பகுதிகளில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் ஆன்லைன் பண மோசடி! இதை மறந்தும் கூட செய்யயாதீங்க! SBI எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
அதன் படி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும், காரையார், பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, முதலியார்பட்டி, கருத்தப்பிள்ளையூர், துப்பாக்குடி, ஏ.பி. நாடானூர், கலிதீர்த்தான்பட்டி, ஆம்பூர், சம்பன்குளம், சேர்வலாறு, சிவந்திபுரம், ஆறுமுகப்பட்டி, விக்கிரமசிங்கபுரம், அடையக்கருங்குளம், கோட்டைவிலைப்பட்டி, பொட்டல்புதூர், பாப்பான்குளம், செல்லப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்