தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான எச்சரிக்கை – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

0
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான எச்சரிக்கை - அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான எச்சரிக்கை - அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான எச்சரிக்கை – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அண்ணா பல்கலைகழகத்திற்குட்பட்ட 225 பொறியியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள், மற்றும் போதுமான பேராசிரியர்கள் இல்லாததால், இது குறித்து எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எச்சரிக்கை நோட்டீஸ்:

தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகள் மற்றும் கட்டிடக்கலை, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை வழங்கும் தனி நிறுவனங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் குறைபாடுகளை 2 வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கப்படும். மேலும் இது தொடர்பாக உரிய விளக்கமளிக்காவிட்டால், அங்கீகார நீட்டிப்பும், மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

மனம் உடைந்து வீட்டிற்கு வந்த பாக்கியா, எழிலிடம் பாக்கியா வந்ததை சொன்ன செல்வி – இன்றைய எபிசோட்!

இதனிடையே பிஇ., பி.டெக் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இதுவரை 1,43,313-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும், 96,759-க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 65,171 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. மேலும் 2 வருட இடைவெளிக்குப் பிறகு, மே மற்றும் ஜூன் மாதங்களில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இணைப்பு நீட்டிப்பு கோரும் 476 கல்லூரிகளில், பல்கலைக்கழகம் நேரில் ஆய்வு செய்தது. அதில், 225 கல்லூரிகளில் குறைந்தது ஒரு திட்டத்திலாவது 50%க்கும் அதிகமான குறைபாடுகள் இருப்பதை கமிட்டி கண்டறிந்தது.

Exams Daily Mobile App Download

பெரும்பாலான கல்லூரிகள் தேவையானதை விட மிகக் குறைவான ஆசிரியர்களைக் கொண்டிருந்தனர், சில கல்லூரிகளில் ஆய்வக வசதிகள் இல்லை” என்று துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறினார். மேலும் 62 கல்லூரிகளில் 25% முதல் 50% வரை உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளது, மேலும் 23 முதல்வர்கள் விதிமுறைகளின்படி தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. தகுதியற்ற நபர்களை முதல்வராக உள்ள கல்லூரிகளுக்கு விதிமுறைகளின்படி புதிய முதல்வர்களை நியமிக்க வேண்டும். 50%க்கும் குறைவான முரண்பாடுகள் உள்ள கல்லூரிகளும், இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், என்று அவர் கூறியதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!