தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – தடுப்பூசி போடவில்லை என்றால் அனுமதி இல்லை! அமைச்சர் தகவல்!
சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார்.
தடுப்பூசி அவசியம்
கொரோனா முதலாம் அலைத்தொற்று ஓய்ந்து வந்ததையடுத்து நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு தான் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்புகளுக்காக மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்களுக்கு செல்ல முகக்கவசம் கட்டாயம் – ஓமைக்ரான் வைரஸ் எதிரொலி!!
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டது துவங்கி இன்று வரையும் பள்ளி மாணவர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் இன்று (டிச.10) சென்னை அண்ணா பல்கலைக்கழத்தை சேர்ந்த 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோரின் தலைமையில், கல்வி நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று (டிச.10) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பது மற்றும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் இவ்வகையான சூழலில் ஏற்படுவதை தவிர்க்க மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
அப்படி தடுப்பூசி போட்டுள்ள மாணவர்கள் மட்டும் தான் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு கொடுத்துள்ளார். கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். வேண்டுமானால் பட்டமளிப்பு விழாக்களை நடத்தி கொள்ளலாம். உணவு இடைவேளை நேரங்களில் மாணவர்களை ஒரே நேரத்தில் அனுமதிக்க கூடாது. வகுப்பறையில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.