SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? ஆதார் – பான் இணைப்பு அவசியம்!
நாடு முழுவதும் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை, பான் கார்டு உடன் இணைப்பதற்கு மத்திய அரசு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், SBI வங்கி தனது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளது.
SBI அறிவிப்பு:
ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்கு இதற்கு முன்னர் மத்திய அரசு பல முறை அவகாசம் அளித்துள்ள நிலையில், கொரோனா தொற்று நோயை கருத்தில் கொண்டு இதற்கு மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் இதுவரை பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆணை ரத்து? நீதிமன்றம் உத்தரவு!
இதனால் அவர்கள் ஆன்லைன் வங்கி மற்றும் பிற சேவைகளை தடையின்றி அனுபவிக்க முடியும் என்று அறிவித்துள்ளது. மேலும், ‘வங்கி சேவையில் எந்தவொரு அசவுகரியத்தை தவிர்க்கவும், தொடர்ந்து வங்கி சேவைகளை பெறுவதற்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்க அறிவுறுத்துகிறோம்’ என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 38,079 பேருக்கு கொரோனா – 560 பேர் உயிரிழப்பு!
மேலும், ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயல்படாது என்றும், வருமான வரி அறிக்கையை (ஐடிஆர்) தாக்கல் செய்யவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கு வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ தளமான www.incometaxindiaefiling.gov.in க்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.