இதை செய்தால் மட்டுமே பென்ஷன்.. ஜன.31 இறுதி தேதி – ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ராஜஸ்தான் உத்தரவு!!
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கான கால அவகாசத்தை ராஜஸ்தான் அரசு நீட்டிப்பு செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பு:
ராஜஸ்தானில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், பயோமெட்ரிக் சரிபார்ப்பை கட்டயாமாக மேற்கொள்ள வேண்டும். இதனை மாநிலத்தில் ராஜீவ் காந்தி சேவா கேந்திரா, இ-மித்ரா கியோஸ்க், இ-மித்ரா பிளஸ் ஆகிய மையங்களில் மேற்கொள்ளலாம். அத்துடன் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆதார் அட்டை அல்லது ஜன் ஆதார் அட்டை, பிபிஓ எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை – தேர்தல் ஆணையம் அறிமுகம்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இதில் உங்களுக்கு கைரேகை பயோமெட்ரிக் உபயோகிக்க முடியாத நிலையில் ஐரிஸ் ஸ்கேன் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதியதாரர் தங்களின் பிபிஓ எண்ணை சமர்ப்பித்த பிறகு, அவரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP எண் சரிபார்க்கப்படும். மேலும் இதே போன்று எஸ்எஸ்பி போர்ட்டலில் தனது சொந்த எஸ்எஸ்ஓ ஐடி மூலம் ஓய்வூதியம் பெறுபவர் சரிபார்க்கலாம்.
இந்த நிலையில், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள், முதியோர், விதவை, சிறப்புத் திறனாளிகள் ஆகியோர்களுக்கான பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கான கால அவகாசத்தை வருகிற ஜனவரி 31ம் தேதி வரை என அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இதனை இ-மித்ரா மூலமாகவும் ஓய்வூதியதாரர்கள் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அத்துடன் ஜனவரி 31ம் தேதிக்குள் பயோமெட்ரிக் சரிப்பார்ப்பு மேற்கொள்ளாத ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.