விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் இருந்து அக்ஷரா எலிமினேட் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் எலிமினேஷன்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டிகளை விடுவித்து குடும்பத்தினரை சந்தித்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். டாப் 10 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில் அதில் பிரியங்கா, சிபி, பாவ்னி, நிரூப், வருண், அக்ஷரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று அக்ஷரா வெளியேறி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஒரு நாள் சண்டை.. அடுத்த நாள் சமாதானம்.. Repeatu – விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வெற்றி பயணம்!
அக்ஷரா ஒரு மாடல் அழகி அவர் ஏற்கனவே பல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும் அவர் பிஸிக்கல் டாஸ்க் கொடுக்கும் போது ஆண் போட்டியாளர்களுக்கு ஈடு கொடுத்து கடைசி வரை போராடி விளையாடுவார். அவ்வளவு ஸ்ட்ராங் போட்டியாளர். அனைத்து வாரங்களிலும் அவர் நாமினேட் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் அவர் வெளியேறினார் என்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும் அவர் இந்த வாரம் பல டாஸ்குகளில் ஈடுபடும் போது சண்டைகள் அதிகமாக ஏற்பட்டது. பிரியங்கா உடன் ஒரு சண்டையின் போது அவர் தமிழ் மொழியை பற்றி சில வார்த்தைகளை வெளியிட்டார். அதனால் கூட ரசிகர்களுக்கு பிடிக்காமல் அவருக்கு குறைவான ஓட்டுகள் இருந்திருக்கலாம். மேலும் இறுதி சுற்றுக்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அக்ஷரா இந்த வாரம் எலிமினேட் ஆகாமல் இருந்தால் கட்டாயம் அவர் இறுதி சுற்றில் இருப்பார் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.