“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா? இனி இவருக்கு பதில் இவர்!
விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதைக்கு முக்கியமான ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை விஜே தீபிகா மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் குறிப்பிட்ட சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு. குறிப்பாக விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதில் கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு குடும்பத்தோடு பார்க்கும் ரசிகர்கள் அதிகம். இவ்வளவு நாள் அண்ணன் தம்பி பாசத்துடன் இருந்த நிலையில், கடைசி தம்பி காதலால் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார். அதனால் அண்ணன் தம்பி இடையே விரிசல் ஏற்படுகிறது.
வீட்டு வாசலில் நின்ற கண்ணனை திட்டி அனுப்பிய தனத்தின் அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
இந்நிலையில் கடைசி தம்பி கல்யாணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். திருநெல்வேலி அருகே சிறிய கிராமத்தில் இருந்து நடிப்புக்காக சென்னை வந்த அவருக்கு இந்த சீரியலில் நல்ல வாய்ப்பாக இருந்தது. இந்நிலையில் அவர் தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் டிவி நடிகையான சாய் காயத்ரி அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய் காயத்ரி விஜய் டிவியின் சிவா மனசுல சக்தி சீரியல் மூலம் பிரபலமானவர். இவர், ஈரமான ரோஜாவே சீரியலிலும் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் இருந்து முக்கிய நடிகை மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் இது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியாகாமல் உள்ளது.